சித்த மருத்துவ குறிப்பு
- தினமும் காலையில் சாப்பிட்டவுடன் வென்னீரில் தேன் கலந்து குடித்து வர ஞாபக சக்தி அதிகமாகும்.
- கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட மூட்டு வலி குணமாகும்.
- திருநீற்றுப்பச்சை இலைச்சாற்றை மூக்கில் நுகர தும்மல் வந்து மூளைக்காய்ச்சல் கிருமி வெளியேறும்.
- வெள்ளைப்பூண்டை கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.
- தும்பை இலைச்சாறு எல்லா விஷக்கடிகளுக்கும் சிறந்தது .
- வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரத்திற்குப்பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
- வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேக வைத்த நீரை கொண்டு தலை முழுகி வந்தாலும் முடி உதிர்வு நிற்கும். பேன் நீங்கும்.
- நல்ல சுண்ணாம்பில் விளக்கெண்ணெய் கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
- தினமும் 5 ஆவாரம்பூ அல்லது 1 கோவை பழம் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.
- வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
- மூளை பலம் பெற எலுமிச்சை பழம் மிகவும் நல்லது.
- விளாம்பூக்களை சுத்தம் செய்து நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி உள்ளுக்கு சாப்பிட்டு வர எலி விஷம் நீங்கும்.
- தீப்புண்ணால் தோலின் நிறம் மாறி வெள்ளையாக இருந்தால், வேப்பம்பட்டை கஷாயம் செய்து பாட்டிலில் வைத்து குலுக்கி வரும் நுரையை வடு மீது தடவி வர தோல் பழைய நிறம் பெறும்.
- காலில் முள் குத்திய இடத்தில் முள்ளை எடுத்த பின் வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அணலில் வாட்டி சூட்டோடு வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி பறந்து விடும்.
- நாவல் பழம் வாயுத்தொல்லை, வயிற்றுப்புண்களை ஆற்ற வல்லது.
No comments:
Post a Comment