வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய வேண்டியவை
மகாலட்சுமி வீட்டில் குடி கொள்ள பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலேயே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்க கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும்போது மகாலட்சுமியே வருக என்று மூன்று முறை கூறவேண்டும். காலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலெட்சுமியின் அருள் கிடைக்கும்.
காலையிலும், மாலையிலும் இருட்டுவதற்க்கு முன்பாக வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். மாலையில் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல், பேண் பார்த்தால், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.
விளக்கு வைத்த பிறகு குப்பை கூளங்களை வெளியேறக்கூடாது. பால், தயிர், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் கூடாது. நெற்றியில் எப்போதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதற்கு முன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக்கொண்டு பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமையன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பதும் அரிசி வறுப்பது மற்றும் புடைத்து போன்றவை செய்யக் கூடாது. செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளிக்க கூடாது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கை துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் வைத்துக் கொடுக்கவும்.
நன்றி
No comments:
Post a Comment