தினம் ஒர் ஆரோக்கியமான தகவல்கள் என்றும் பொக்கிஷம் போன்றது.
காபி, டீ க்குப் பதிலாக என்ன குடிக்கலாம்
எழுந்ததும் ஏதேனும் சூடாகக் குடிக்கும் பழக்கம் இருந்தால், அது டீ, காபியாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுக்கு காபி, பானகம், மூலிகை டீ மற்றும் கஞ்சியாகவும் இருக்கலாம். இனிப்புக்குக் கருப்பட்டியைச் சேர்க்கலாம். மூலிகை டீ குடிக்க விரும்புவோர், சுக்கு, மிளகு, பட்டை, ஏலக்காய், தனியா, ஆவாரம் பூ, லெமன் க்ராஸ், கொய்யாத் தழை, முருங்கைத் தழை, துளசி ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். சுக்கு, ஏலக்காய், கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து, சுக்கு மல்லி காபி குடிக்கலாம். வெந்நீரில் வெல்லம் சேர்த்து, ஏலக்காய் தட்டிப்போட்டு பானகமாகக் குடிக்கலாம்.
🌹:வேனற்கட்டி வரமால் தடுக்க.
முளை கட்டிய தானியங்கள்,தக்காளி, ஸ்ட்ராபெரி, அத்திபழம் இவற்றை தினமும் உணவில் சேர்க்க வேனற்கட்டி வரமால் தடுக்கலாம்.
🌹:குடல் வீக்கம், வயிற்றுமந்தம் சரியாக.
கீழாநெல்லியை பால் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு 3 நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால், குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல்… குடல் வீக்கம், வயிற்றுமந்தம் சரியாகும்.
🌹:வாயுத் தொல்லை குறைய.
வெப்பம் பூவை காய வைத்து போடி செய்து வெந்நீரில் கலந்து தினமும் காலை, மாலை குடிக்க வாயுத் தொல்லை குறையும்.
🌹:ஈறுகளில் இருந்த பிரச்சனைகள் அகல.
வேப்ப மரக்குச்சியை மெல்லும் போது அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் ஜூஸ்கள் ஈறுகளைத் தாக்கிய கிருமிகளை அழித்து வெளியேற்றிவிடும். ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் செல்வதற்கு முன், வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வாருங்கள். இதனால் உங்கள் ஈறுகளில் இதுவரை இருந்த பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.
🌹:கிராம்பு பலன்கள்.
பூஞ்சைத் தொற்றுகளை அகற்றும்.
வாந்தி உணர்வைப் போக்கும்.
வைட்டமின் கே, துத்தநாகம், ஃபோலேட் சத்து உள்ளன.
பல்வலிக்குச் சிறந்த நிவாரணி.
🌹:சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும் பார்லி நீர் !
பார்லியை அரைத்து மாவாக்கி, 2 தேக்கரண்டி அளவு எடுத்து 3 டம்ளர் நீர்விட்டு குக்கரில் 3-4 விசில் வரும் வரை விட்டு ஆறியபின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை, தேவை எனில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இது உடல் சூட்டைக் குறைக்கும். சிறுநீர் எரிச்சலைத் தணிக்கும். சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வரும் கால் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
🌹:நம்ம ஊரு வைத்தியம்!
கை-கால் வலி, மூட்டுவலி, வாயு பிடிப்பு, அடிபட்டு ரத்தம் கட்டுதல்னு பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன் கொடுக்கும். பாதிக்கப்பட்ட இடத்துல பூசுறதுக்கு தேவையான அளவு கடுகை எடுத்து, தண்ணி விட்டு அரைச்சுக்கங்க. பிறகு, அதை லேசா சூடு காட்டி பத்து போட்டா… கை-கால் வலியில இருந்து எல்லா பிரச்னைகளும் சரியாகும். தேவைப்பட்டா… கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்துக்கிடலாம்.
ஆரோக்கியம் என்றும் ஒரு பொக்கிஷம் தான்.
நன்றி:-