Friday, January 11, 2019

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப்


ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் 
.
ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
.
இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால், 
சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
.
இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.
.
எப்படி இந்த சேவையைப் பெறுவது?
.
* முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.
.
* வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.
.
* வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள்.
.
* அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.
.
அதுமட்டுமல்லாமல், 'நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக்கிறேனா?' என்று கேள்வி எழுப்பபட்டு, கருத்தும் கேட்கப்படுகிறது.
.
இந்த சேவையை ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து அளிக்கிறது.
.
இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் லைவ் ஆகத் தெரிந்துகொள்ள முடியும்.
.
மறக்க வேண்டாம்
7349389104
.
மற்றவர்களுக்கு பகிரவும்

Thursday, January 3, 2019

சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்

சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள் 
Image may contain: outdoor
1 ஆகாயம் – சிதம்பரேசுவரர்:
சென்னையில் அமைந்திருக்கும் ஆகாய ஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும். இதன் மூலவர்திருமூலநாதசுவாமி ஆவார். மிகவும் பழுதடைந்த கோவில். தினமும் காலை 6 மணிமுதல் 11.30 வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும். 1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும்தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு8.30க்கு நடைபெற்றுவருகிறது.
2 மண் – ஏகாம்பரேஸ்வரர்:
சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.சென்னையில்வன்னிமரத்தடியிலும், அரசமரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே! மண் ராசிகளான ரிஷபம்,கன்னி,மகர ராசிகள் மற்றும் ரிஷப லக்னம்,கன்னி லக்னம், மகரலக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட,அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய கிட்டும்.
3 நீர் – கங்காதரேசுவரர்:
சென்னையின் நீர் ஸ்தலமான கங்காதரேசுவரர்,தாமரைத்தாய் மற்றும் பங்கஜாம்பாளுடன் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். கடக லக்னம் அல்லது கடகராசி, விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி,மீன லக்னம்அல்லது மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வருகை தந்து சிவ அபிஷேகம் அல்லது ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்.ஏனெனில்,இந்த ராசி மற்றும் லக்னமானது நீர் ராசியைச் சேர்ந்தது ஆகும்.
4 நெருப்பு – அருணாச்சலேசுவரர்,அபிதகுலசாம்பாள்:
சென்னையின் நெருப்பு ஸ்தலமாக அருணாச்சலேசுவரர்+அபிதகுலசாம்பாள் திருக்கோவில் திகழுகிறது.நெருப்பு ஸ்தலமான அண்ணாமலைச் சமமான இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது. ஜீவகாருண்யத்தை நமக்குப் போதித்த ராமலிங்க வள்ளலார் வழிபட்ட ஆலயம் இது. இங்கேபெரிய சிவலிங்கத் திருமேனி அம்பாள் 6 அடி உயரத்தில் அருள்பாலித்து வருகிறார். மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசி,சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசி,தனுசு லக்னம் மற்றும்தனுசு ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி இங்கே வந்து வழிபட அவர்களின் நியாயமானநோக்கங்கள் நிறைவேறும்;தகுந்த ஆன்மீக குருவை அடையலாம்;மற்ற ராசிக்காரர்களும்இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர மிகுந்த ஆன்மீக வளர்ச்சியைப் பெறுவார்கள்.
5 வாயு – காளத்தீசுவரர்,ஞானபிரசன்னாம்பிகை:
சென்னையின் வாயு ஸ்தலமான அருள்நிறை காளத்தீசுவரர்+ஞானபிரசன்னாம்பிகை அம்மன் திருக்கோவில், மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி,துலாம் லக்னம் அல்லது துலாம் ராசி,கும்ப லக்னம்அல்லது கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சிவகடாட்சம் இங்கே கிடைத்துக் கொண்டேஇருக்கும்;யாரெல்லாம் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது சிவ வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு சிவகடாட்சமும்,பைரவ கடாட்சமும் எளிதில் கிட்டும்.

Monday, December 24, 2018

Sprain Oil- சுளுக்கு தைலம்!!!
44 வகை சுளுக்குகளை தீர்க்கும் 'சுளுக்கு தைலம்' வீட்டிலேயே தயாரிக்கும் முறை ;

1. நல்லெண்ணெய் ...ஐம்பது மிலி 
2. புங்க எண்ணெய் ....ஐம்பது மிலி
3. புளிய இலை...... ஒரு பிடி 
4. வெற்றிலை அரைத்த விழுது .... ஒரு தேக்கரண்டி

5. பூண்டு - ஒரு தேக்கரண்டி
6. கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
7. ஓமம்- ஒரு தேக்கரண்டி 

வாணலியில் இரண்டு எண்ணெய்களையும் ஊற்றி சிறு தீயில் சூடேற்றி....
அத்துடன் ஒவ்வொரு பொருளாகப் போட்டு கொதிக்க வைத்து.....
கடைசியாக ஓமம் போட்டுப் பொரிந்து வந்ததும் தைலமாக இறக்கி ....
பச்சை கற்பூரம் ...... ஐந்து கிராம்
தூளாக்கிப் போட்டுக் கரைந்ததும் இறக்கி வடிகட்டி ஆறவைத்து சேமிக்கவும் .

இந்த சுளுக்கு தைலத்தை......
சுளுக்குப் பிடித்துள்ள இடங்களில் சூடு பறக்கத் தேய்த்து......
வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வர......
"நாற்பத்தி நான்கு வகை சுளுக்குகளும் குணமாகும்"....!!

வாஸ்து தகவல்

வாஸ்து தகவல்
Image may contain: one or more people and indoor
வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும் …. ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும்,
முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது,
ஜாதி முல்லை ,மல்லிகை ,பாதிரி ,தாமரை ,தும்பை ,பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்பது மனை தோசத்தை சரி செய்யும்,

தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது ,தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும்,
நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால்
அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ,ஆரோக்கியம் கெட்டு விடும்,
துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது,
ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட கூடாது,
வீட்டின் வாசலில் அல்லது நிலகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது,
அசைவ கழிவுகள் ,மலமூத்திர கழிவு தேக்கம், பழைய துணிகள்,குப்பைகள் போன்றவற்றை வாசலில் இருக்க கூடாது,
சந்தன முல்லை ,துளசி ,பவளமல்லி ,பன்னிர் செடி ,திருநீர்பத்திரி ,கற்பூரவள்ளி போன்ற தெய்விக வாசனை தாவரம்கள் வளர்க்க அம்பாளின் அருள் ஆசிகள் கிடைக்கும்,
கோபுரம் நிழல் ,அல்லது கொடிமரத்தின் நிழல் நம்முடைய மனையின் மீது விழாத படி வீடு கட்டவேண்டும் .மேலும் பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன் ,கணபதி கோவில் எதிர் புறம் வீடு கட்ட கூடாது.

நன்றி:

"பல்லி" - பின்னால் நிகழ்வதை முன்பே சொல்லும்..!

 "பல்லி" - பின்னால் நிகழ்வதை முன்பே சொல்லும்..!
No automatic alt text available.
பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. மேலும் பல்லியானது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் எளிதாக காணக் கூடிய ஒன்று தான்.
பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
நமது உடல் பாகங்களில் பல்லி விழுந்தால் என்னென்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்பல்லி விழும் பலன்கள்:-
தலை
பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்மறையாக உணர்த்துகிறது.
இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதியின்மை அல்லது 'உறவினர் அல்லது நன்கு தெரிந்தவர்' களுக்கு மரணம் ஏற்படலாம்.
நெற்றி
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி மற்றும் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் என அர்த்தம்.
முடி
தலையில் விழுவதற்கு பதிலாக தலையில் உள்ள முடியின் மீது விழுந்தால் ஏதோ ஒரு வகையிலான நன்மை கிட்டும்.
முகம்
முக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால் ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம்.
மேலும் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
இடது கை அல்லது இடது கால்
இடது கை அல்லது இடது காலில் விழுந்தால் மகிழ்ச்சி கிடைக்கும். இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.
பாதம்
பாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பிறப்புறுப்பின் மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.
தொப்புள்
பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும்.
தொடை
பல்லி உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.
மார்பு
இடது பக்கம் மார்பில் பல்லி விழுந்தால் சுகம் மற்றும் வலது பக்கம் மார்பில் விழுந்தால் லாபம் கிடைக்கும்.
கழுத்து
கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும் மேலும் வலது பக்கம் விழுந்தால் மற்றவருடன் பகை உண்டாகும்.
பரிகாரம்
பல்லி விழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டியது உடனே குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால், உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம்.
பூஜை அறையில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றலாம்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பல்லி உள்ளது. அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம்.
அந்த பல்லிகளை தொடுவதால் நம் மீதுள்ள தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

Tuesday, December 18, 2018


குழந்தைப்பேறு அருளும் மந்திரம் 
Image may contain: one or more people, people standing, grass, child, outdoor and nature
16 செல்வங்களுள் குழந்தைபேறு சிறந்த செல்வமாக கருதப்படுகிறது.குழந்தைப்பேறு இல்லாதவர்கள் படும் மனக்கவலை சொல்ல முடியாதது அதற்கு வெறுமனே ஆறுதல் மட்டும் சொல்லி ஆற்றமுடியாது. எனக்குத் தெரிய பல மந்திர ஜெபம்,பிரயோகம் இருப்பினும் அவற்றில் எளிய முறைகளை இங்கு பதிகிறேன்.
1.கிருஷ்ண மந்திரம்:-
ஓம்| க்லீம் கிருஷ்ணாய |கோவிந்தாய| கோபிஜன வல்லபாய ஸ்வாஹா ||
இம்மந்திரத்திற்கு ரிஷி நாரதர் அவரை மந்திரம் பலிக்க வேண்டிக்கொண்டு பின் ஜெபிக்கவும்.இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர மந்திரத்தின் சக்தியைக் கூட்டும்.
2.கிருஷ்ண மந்திரம்:
தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே |
தேஹிமே தனயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:|
தேவ தேவ ஜகன்னாத கோத்ர வ்ருத்திகரப்ரபோ|
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர மந்திரத்தின் சக்தியைக் கூட்டும்.
3.கிருஷ்ண மந்திரம்:
இந்திரா நீல சமயச்சாயம் பீதாம்பரதரம் ஹரிம் |
சங்க: சக்ர:கதாபத்மை :லசத்பாஹு விசிந்தயேத்||

இதனை ஒரு தேய்பிறை அஷ்டமியில் இருந்து மறு தேய்பிறை அஷ்டமி வரை 1 மாதம் தினம் 8 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.இம்மந்திரம் குழந்தை பாக்கியம் மட்டுமின்றி எண்ணிய எண்ணங்களையும் நிறைவேற்றும்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன
Image may contain: 1 person
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை / கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.
இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும்போது ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம். இவ்வாறு தடுக்கும்போது நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப்பாதையில் தங்கிவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில் சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி, நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும். இந்த செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose) ஏற்படும். இதையும் வியாதி என புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம். இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது.
இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும். இந்த நீரை தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள். பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது. இதை தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம். இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதை தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்ற முடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும். அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.
வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs) படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும். இந்த நிலையை தான் மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம். இதுவே பெருவாரியான சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிக குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நாம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம் அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில் குறைவான சிற்றலைகள் மட்டுமே திறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும். பெரும்பகுதியான சிற்றலைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான் கழிவுகளின் தேக்கம் வியாதி; கழிவுகளின் வெளியேற்றம் குணம் என்று கூறுகிறோம்.
இப்போதும் ஒருவருக்கு ஏன் ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள் திட வடிவம் (Solid State) பெறுகிறது. இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி மருத்துக்கள் உட்கொண்டு அவற்றை தடுத்துவிடுகிறோம். பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய் (T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம்.
இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சி மேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போது பயாஸ்பி (Biospy) எடுத்து புற்றுநோயா (Cancer) என சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள். கழிவின் தேக்கத்தில் எங்கு இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர். இது தான் நுரையீரல் புற்றுநோய் (Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.
எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றையதினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில் தேடுகிறோம்.
நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்?
* தும்மல்
* மூக்கு ஒழுகுதல்
* சளி
* இருமல் மூலமாக வெளியேற்றும்.
இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போது இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலே அதன் அடர்த்தி அதிகமாகி நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக் கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும்.
காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.
யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை.
யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றியும் மற்றும் பசிக்கவில்லை என உணவின்றியும் ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid, Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல), புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.
இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.